Skip to main content

தமிழில் ஆங்கிலம்


தொய்மையான தமிழ் மொழி. செம்மொழி , கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய  மூத்த மொழி. லடினுகும் ,சமஸ்க்ரிததுகும் மூத்த மொழி என்ற பெயர் பெற்றது. மற்ற நாடுகளில் மொழி பேசும் முன்பு பாடலும் பண்ணும் பேச ,பாட  பெற்ற  மொழி என்ற பெருமையும் உண்டு.
தற்போது தமிழின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதே நமது கேள்வி. இப்போது நான் எழுதும் தமிழ் கூட சரியானதுதானா என்பது என் சந்தேகம் .தேவன்ன்கிரி script என்று ஒன்று உண்டு. அது வழக்கில் உள்ளதா  என்பதே கேள்விகுறி .
சரி நாம் தலைப்புக்கு வருவோம் .தமிழில் ஆங்கிலம் . ஆங்கிலம் என்ற வார்த்தை தமிழ்தான். ஆனாலும் எத்தனை  வார்த்தைகள் தமிழில் தலையீட்டி உள்ளது என்பதை நாம் அறிவோமா ?
நமது தமிழில் குவளை என்ற அழகான தமிழ் வார்த்தை உள்ளது. ஆனால் தற்போது அது டிப்பர் (dipper) என்றே உரைக்க பட்டு வருகின்றது. மதுரை வழக்கத்தில் அசால்ட் என்ற வார்த்தை உள்ளது  அதற்கு அர்த்தம் லேசானது அல்லது சுலபமானது என்று கொள்ளலாம் . அது assault என்ற ஆங்கில வார்த்தையில் இருந்து வந்தது. அதற்கு அர்த்தம் தாக்குதல் என்றே அர்த்தமாகும். கூலி என்றொரு வார்த்தை உண்டு ஆனால் அது தமிழ் வார்த்தை அல்ல என்பது நிறைய பேருக்கு தெரிந்திரிக்க நியாமில்லை. Coolie என்பது வேலைகாரர்கள் ,பொதுவாக ஆசிய வேலைகரர்களுக்கு ஆங்கிலேயர்கள் வாய்த்த பெயர் (A historical term for manual labourers from Asia, particularly China and India, in the 19th century and early 20th century) .
ஓசியாக வாங்குவது என்பது தமிழக மக்கள் ஏன் அனைத்து நாட்டின் மக்களுக்கும் அலாதியான விருப்பம்தான். ஆனால் ஓசி என்பது தமிழ் வார்த்தைய என்று எண்ணும் போது அது ஆங்கிலமே என்ற உண்மை தடுக்கின்றது.  Originalaka O.C  என்பது ராணுவ மொழியில்  officer command  என்றே அர்த்தமாகும். ராணுவத்தில் உள்ள ஒபிசர் தனது வேலையாளிடம் வேலை சொல்வது ஓசி ஆனது. ஊக்கு என்பது நம்மக்கு மிக பரிச்சியமான ஒன்று  ஆனால் அது  Hook  என்ற வார்த்தையில் இருந்தே வந்துள்ளது. எனக்கு தெரிந்து மதுரை வட்டாரத்தில் டோப்படிது போவது ன்பது வழக்கம். வண்டியில் பெட்ரோல் இல்லாவிட்டால் இப்படி செய்வது வழக்காமான ஒன்று . ஆனால் அது  Tow  என்ற வார்த்தையில் இருந்தே வந்துள்ளது.  Tow  என்றால் இழுப்பது என்பதே பொருள்.
Copy என்பதுமே தமிழாக மாறிவிட்டது.

இதை தவிர்த்து நீரைய வார்த்தைகள் தமிழில் நமக்கு அர்த்தம் தெரிந்தாலும் அதை நாம் ஆங்கிலத்திலே உபயோக படுத்துகிறோம் என்பதே உண்மை.  matter , watch , cement , chair , bus, ticket, tire, wire, doctor, conductor ,driver ,seat,car, auto,cycle, busstop,busstand, etc.

ஆங்கிலத்தை அழகாக தமிழ் ஆக்கம் ஆக்கிய  நாம் (Computer = கணினி, internet = இணையத்தளம் ) போன்ற நிறைய ஆங்கிலத்தை தமிழாக  ஏன்   இங்கிலீஷ்யை ஆங்கிலமாக ஆகிய நாம் தமிழில் தடுமாறி வருகிறோம் என்பதே உண்மை. ஆங்கிலேயர்கள் 200  வருடம் ஆண்டுகள் நம்மை ஆண்டு நம் வாழ்வில் ஆங்கிலத்தை  நம் மொழியில் ஆங்கிலத்தை புகுத்தி விட்டனர். தமிழ் மெல்ல சாக வில்லை . தமிழர்கள் ஆகிய நாம் சாகடித்து கொண்டிரிகொறோம் என்பதே உண்மை. ஆங்கிலத்தை தமிழாக  மாற்றிய நாம் , தமிழில் ஆங்கிலம் புகுந்தது என்பதை ஒத்து கொள்ள மாட்டேன் என்கிறோம். Bus number சொல்லுங்கள் என்கிறோமே தவிர தமிழில் உரைக்கவில்லை.படிக்காத பாமரன் கூட சேர்ல(Chair) உட்காருங்க என்கிறானே தவிர தமிழ் இல்லை.
இதில் மிக பெரிய காமெடி (பாருங்க தமிழ் வரல ) என்வென்றால் நம் அரசியல் வாதிகள் தமிழ் தமிழ் என்று உரைத்து கொண்டே இருக்கிறார்கள் தவிர உறைகிறார்கள் அவளோதான். பாமாக நிறுவனர் ராமதாசிற்கு cement என்பதற்கு அர்த்தம் தெரியுமா என்று தெரியவில்லை. அரசியலுக்கு மன்னிக்கவும் வாசகர்களே. ஆக தமிழ் மக்களுக்கு ஆங்கிலம் எவள்ளவு இன்றியமையாதது  என்பதை நாம் பேசும் வார்த்தைகளே  கற்று கொடுக்கின்றது. இது தமிழில் மட்டுமா என்றால் இல்லை என்பதே என் கருத்து மட்டற்ற மொழிகளுக்கும் இதே நிலைதான்.
இதில் நாம் பெருமை கொள்ளும் விஷயமும் உண்டு . கட்டுமரம்  catamaran ஆனது. கர்மம் karma ஆனது .
தமிழ் வளர்க்க  போராடும் நம் மக்களுக்கு நிறைய குழப்பம் உள்ளது. Car யை மகிழுந்து ஆகிய நாம் நமது பெயர்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்க அனுமதிக்க வில்லை.
என்னை பொறுத்தவரை ஒரு பெயர் சொல்லை ,பொது பெயரை தமிழில் இருந்தால் அது ஆங்கிலத்திலும் அதே பெயர்தான். ஆனால் நாம் மட்டும் அதை மொழி மாற்றம் செய்த உலக பெருமை கொள்கின்றோம். நமது அருமையான தமிழ் வார்த்தைகளை மறந்தும் விட்டோம் என்பதை  நாம் மடமையோடு, தாழ்ந்த மனதோடு  ஏற்று கொள்ள வேண்டிய உண்மை என்பதே மெய்.

தமிழை காப்பாற்ற வேண்டிய நம்மின் செயல்பாடுகள் : முடிந்தவரை தமிழின் பெருமைகளை நமது குழந்தைகளுக்கு சொல்லி தரவேண்டும். ஆங்கில வழி கல்வியோ தமிழ் வழி  கல்வியோ தமிழின் முக்கியதுவத்தை நாம் அவர்கட்கு அறிவிக்க வேண்டும். முடிந்த வரை இலக்கணத்தை நாமமும் கற்று கொள்ள வேண்டும். தமிழுக்கு ஒரு பெருமை உள்ளது . விகுதி என்ற ஒன்று பாலிற்கு தகுந்தவாறு வேறு படும் . எடுத்து காட்டிற்கு அவன் வந்தான். அவள் வந்தாள். அது வந்தது  என்ற வார்த்தைகளில் விகுதி மாறுகின்றது. ஆங்கிலத்தில் அவ்வாறு கிடையாது.  he is coming, she is coming, it is coming என்று விகுதி மாறாமல் வரும். இது போன்ற விருத்தியான விஷயங்கள் தமிழில் நிறைய உண்டு (இது தவறென்றால் தமிழ் பேராசிரியர்கள் மன்னிக்க வேண்டும் )247 எழுத்துகள் இருக்கும மொழி 26  எழுத்துகள் இருக்கும் மொழியால் ஆட்கொள்ள பட்டு வருகின்றது. ஆங்கில மொழியை இப்போது கற்று கொள்ள வேண்டிய அவசியம் என்றாலும் நம் தாய் மொழியான தமிழ் மொழியை அழித்து கற்று கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
திருக்குறளை உலக பொதுமறை என்று ஏற்று கொண்ட உலகம் அந்த நூல் இருக்கும் மொழியை ஏற்று கொள்ள வில்லை. ஏன் நமது நாட்டில் கூட அது ஆட்சி மொழியாக இல்லாமல் போனது. அதற்கு நிறைய அரசியல் காரணம் இருந்தாலும் நம்  மொழியின் தொன்மையை நாம் வேரூன்றி அழித்து கொண்டிருப்பதே உண்மை .  
 
(குறிப்பு : முகப்பு புகை படத்திற்கு மன்னிக்கவும்)



Comments

  1. மிகவும் அருமையான கட்டுரை....நன்றி சந்துரு..

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

Green Hornet

கிரீன் ஹார்நெட் அமெரிக்காவின் வழக்கமான சூப்பர் ஹீரோ படம். அதை காமெடி கலந்து சொல்லி இருகின்றனர் . 1930 -களில் வானொலியில் தொடராக வந்ததை படமாக எடுத்து இருகின்றனர். Directed by Michel Gondry Produced by Neal H. Moritz Written by Seth Rogen Evan Goldberg Based on The Green Hornet by George W. Trendle Fran Striker Starring Seth Rogen Jay Chou Christoph Waltz Cameron Diaz Music by James Newton Howard Cinematography John Schwartzman Editing by Michael Tronick Studio Original Film Distributed by Columbia Pictures Plot : ஆரம்ப காட்சியில் ஒரு சிறுவனை "The Daily Centinal" என்ற பத்திரிக்கை அலுவலகத்திற்கு அழைத்து செல்கிறார் ஒருவர். அங்கே அந்த சிறுவனது தந்தைதான் பத்திரிகை அலுவலகத்தின் நிறுவர். தந்தை தன் மகனை கண்டிக்கிறார் அவன் செய்து தவறிற்கு அவனது விளையாட்டு பொம்மையை உடைகின்றார். cut 20 வருடங்களுக்கு பிறகு என்று கண்பிகின்றனர். வில்லன் சட்நோப்ச்கி(Christopher Waltz)  தனது சகாக்களுடன் ஒரு சூதாட்ட கிளப்பிறகு செல்கின்றான். அங்கே அவன் தனது Control லில

Siruthai Vimarsanam

சிறுத்தை -  தமிழில் ஹீரோக்கள் வெற்றி formula வாக வைத்திருக்கும் dual role subject.   கார்த்தி கிட்டத்தட்ட வெற்றியும் பெற்று விட்டார் என்றுதான் கொளவேண்டும் . தெலுங்கில் வெற்றி பெற்ற விக்ரமகாடு(( Dubbed into malayalam as vikramathithya and Hindi as Pratighat ) வை ரீமேக் செய்து வெற்றியும் கண்டு இருகிண்டிறனர். இது கார்த்தி யின் 5 அவது படம் .  நான் மகான் அல்ல வெற்றிக்கு பிறகு வெளி வந்திருக்கும் படம். Cast: Karthi Tamannaah Bhatia Santhanam Avinash Rajiv Kanakala Music : Vidya sagar Cinematography : Vel raj Editing : Vinayan Direction : siva Producer : Gnanavel raja.  Plot : கதைக்கு (வழக்கம்தான் ) வருவோம் . முதல் சீனில் வில்லன் பாவுஜிக்கு தனது சகாவிடம் இருந்து போன் வருகிறது . ரத்தினவேல் பாண்டியன் சாகவில்லை  உயிரோடுதான் உள்ளார் என்று. போன் செய்த சகா ஒரு மர்மமான மனிதரால் கொல்ல படுகிறார் .கார்த்தியின் (ரத்தினவேல் பாண்டியன்) சமாதிக்கு சென்று பிரேதத்தை தேடுஹின்றனர் கிடைக்கவில்லை. (வழக்கமான villan expression on that scene). Cut நமது ராக்கெட் ராஜாவின் introducing.  அவர் தன

Aadukalam

ஆடுகளம் -  வெற்றி மாறனின் இரண்டாவது படைப்பு. பொல்லதாவனில் கண்ட வெற்றியை இதிலும் கண்டிரிகிறார். தனுஷின் வெற்றி மற்றும் நடிப்பின் வரிசைலும் இந்த படம் பேச படும் . Directed by Vetrimaran Produced by Kathiresan Written by Vetrimaran Starring Dhanush Taapsee Pannu Kishore Music by G. V. Prakash Kumar Cinematography Velraj Editing by Te. Kishore Plot: ஆரம்ப காட்சியில், இரவில் ஒரு வீட்டின் உள்ளே தனுஷ் கத்தியுடன் நிற்கின்றார் . கட் செய்தல் ஹீரோஇன் டாப்சி கை அறுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்ல படுகிறார் .ஆர்ப்பாட்டமே இல்லாமல் flash back  ஆரம்பிகின்றது.ஏதோ ஒரு வேலையில் இரண்டு கோஷ்டிகள் சேவல் சண்டையில் ஈடுபடுகின்றனர். அது இரத்தினசாமீ மற்றும் பேட்டகாரன்நின் சேவல் சண்டை. தடை செய்ய பட்ட சண்டையில் போலீஸ் தலையீடு . ரத்தினசாமி ஒரு போலீஸ் காரர். தலை முறை தலை முறையாக சேவல் சண்டை விடுபவர். ஆனால் பேட்டை காரனிடம் மட்டும் தோற்று  கொண்டிருப்பவர். பேட்டைகாரர் அவரின் சேவல் வளர்ப்பு தனி விதம். அவருடன் இருக்கும் துரை (கிஷோர்) , அயுப் (பெரிய கருப்பு  தேவர்) ,கருப்பு (தனு